Saturday, October 24, 2015

பலன் தரும் பழங்கள் - இன்று திராட்சை

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே யூதர்கள் திராட்சை பழத்தின் பலன் அறிந்து அதன் ரசத்தை தங்கள் உணவுகளுடன் இணைத்துக் கொண்டார்கள். அநேகம் பேர் இதை நாம் கிறித்துவ புனித நூலான பைபிளின் மூலம் தெரிந்திருக்கலாம். ஆனால் தற்போது அதன் உபயோகம் என்பது மிகக்குறைந்து அதன் சுவைகொண்ட செயற்கை...

Sunday, October 4, 2015

நலம் தரும் காய் கனிகள் - வரிசையில் இன்று நெல்லிக்கனி

கனிகளுள் இரண்டு வகை கனிகளுக்கு மட்டும்தான் 'ராஜ கனிகள்' என்று பெயர். ஒன்று எலுமிச்சை மற்றொன்று நெல்லிக்கனி. இக்கனியின் ஆயுள் நீட்டிக்கும் தன்மை தெரிந்துதான் அதியமான் அவ்வைக்கு கொடுத்ததாக வரலாறுகளில் கூறப்படுகிறது. இப்படி நீண்ட வரலாறு கொண்ட அமிர்தத்திற்கு ஒப்பான அந்த நெல்லிக்கனியின்...

Saturday, September 26, 2015

உணவுபொருட்களை நாமே தயார் செய்து கொள்வது எப்படி? இன்று நல்லெண்ணெய்...

'வைத்தியனுக்கு கொடுக்கிறத வாணியனுக்கு கொடு' இப்படி ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். சுத்தமான பொருட்களை வாங்கி உபயோகப்படுத்தினால் நோய் நொடி இல்லாமல் வைத்தியனிடம் போகாமல் நம்மள நாமே பாதுகாத்துக்கலாம் இல்லையா? நாம வாங்கக்கூடிய பொருள் எல்லாமே சுத்தமானதுதானா அப்படின்னு பாத்தா ரொம்ப...

Tuesday, September 22, 2015

தினம் ஒரு கீரையில் இன்று கொத்தமல்லி கீரை

கொத்தமல்லி கீரை அட.. என்ன ஒரு மணம்...! இந்த பேரை சொன்னாலே உங்க மூக்குல ஒரு வாசனை உள்ள போகுமே..! ஒரு மிதிவண்டியில அந்த கீரைய கொண்டுட்டு போனா அந்த தெருவே அப்படி ஒரு மணமா இருக்கும்ல..? அப்படிப்பட்ட இந்த கீரைய சமையலுக்கு உபயோகிக்காத வீடே இல்லைன்னு சொல்லலாம். கடையில எந்த ஒரு சமையலுக்கும்...

Sunday, September 20, 2015

காலத்திற்கேற்ப உண்ணக்கூடிய கீரை வகைகள்

நமது நண்பர்களில் சிலர் கீரைகளை குளிர் காலத்தில் சேர்த்துக்கொள்ளலாமா? வெயில் காலத்தில் சேர்த்துக்கொள்வது நல்லதா? இந்தகீரைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? இந்த கீரையை இந்த நோய் தாக்கம் உள்ளவர்கள் சாப்பிடலாமா? என்பது மாதிரியான சந்தேகங்களை கேட்டுகொண்டிருந்தார்கள். அவர்களுக்காக இந்த பதிவினை இப்போது தருகிறேன். இதன் படி நீங்கள் கீரைகளை எடுத்துக்கொள்ளுங்கள். கோடை காலத்தில் (பங்குனி மாதம்...

Saturday, September 19, 2015

தினம் ஒரு கீரையில் இன்று மணத்தக்காளி கீரை...!

மணத்தக்காளி கீரை மிளகு தக்காளி, சுக்கட்டிக்கீரை, கருஞ்சுக்கட்டி ... இந்த பெயர்களை எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா...? இவையெல்லாம் மணத்தக்காளி கீரையின் மற்ற பெயர்களே... இந்த செடியினை அதிகம் பேர் பார்த்திருப்பீர்கள். குட்டித்தக்காளி, குட்டை தக்காளி, குறுந்தக்காளி என்று கிராமங்களில்...

Wednesday, September 16, 2015

தினம் ஒரு கீரையில் இன்று... பசலைக்கீரை...!

பசலைக்கீரை மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டோருக்கான சிறந்த நிவாரணி பசலைக்கீரையாகும். மஞ்சள் காமாலையால் உடல் மெலிந்தவர்கள் பசலைக்கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். மேலும், மலக்கட்டு சீர் செய்யும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி பார்வை தெளிவு பெறும். பசலைக்கீரையை வதக்கி வீக்கம்,...

Saturday, September 12, 2015

தினம் ஒரு கீரையில் இன்று வல்லாரைக்கீரை ...!

வல்லாரைக்கீரை சரஸ்வதி கீரை,யோசனை வல்லி என்று சொல்லப்படும் இக்கீரையில் இரும்புச்சத்து, மனிச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் மிகுதியாக உள்ளது. இந்த கீரையினை பறித்து அப்படியே பச்சையாக தினமும் காலையில் வாயில் போட்டு மென்று...

Friday, September 11, 2015

தினம் ஒரு கீரையில் இன்று அகத்திக்கீரை ...!

அகத்திக்கீரை அகம் + தீ + இலை = அகத்திஇலை. அகத்தில் (உடலில் அல்லது மனத்தில்) உள்ள தீயை இல்லாமல் செய்யாமல் செய்யக்கூடியது. எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து அவசியம் தேவை. அகத்திக்கீரையில் தேவையான கால்சிய சத்துக்கள் உள்ளது. கண்களின் பார்வை திறனுக்கு...

Tuesday, September 8, 2015

தினம் ஒரு கீரை ...!

முருங்கைக்கீரை இன்று நம் பதிவில் முருங்கைக்கீரையைப்பற்றியும் அதோட பயன்கள் பற்றியும் எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிரலாம் என்று இருக்கிறேன். முருங்கை மரமானது, ரத்த விருத்தியையும், தாது விருத்தியையும் உண்டாக்கக்கூடியது என்பதால் இது பிரம்மாவின் அம்சம் என கருதப்படுகிறது. முருங்கையில்...

Friday, September 4, 2015

மூலிகை பூச்சி விரட்டி

வணக்கம் அண்ணாச்சி ....! வாங்க.. வாங்க..! ஏ... குமாரு .... வாப்பா. வா... என்ன, நான் வரதுக்கு முன்னாடியே நீங்க எல்லாரும் என் வீட்டுல வந்து நிக்கீங்க போலிருக்கு... வாங்க... வாங்க... எல்லாரும் வாங்க.... ஏ... மரியாதையெல்லாம் வேண்டாம்பா.. உக்காருங்க.. உக்காருங்க... அப்படியே உக்காருங்க.... சரிங்க...

Wednesday, September 2, 2015

பயிர் பாதுகாப்பு

ஏ .... என்ன ராமசாமி.. சொல்லி வச்ச மாதிரி எல்லாரும் ஒன்னு போல வந்துட்டீங்க. பரவாயில்லைப்பா ... உங்க ஆர்வத்த பாராட்டுறேன். சரி. வாங்க. எல்லாரும் அப்படி அப்படி உக்காருங்க. டேய் மாடசாமி, தள்ளி உக்காருப்பா. அவன இடிச்சிட்டு உக்காரதேப்பா... ம்ம். சரி. அண்ணாச்சி பயிர் பாதுகாப்பு பத்தி...

Friday, August 28, 2015

பயிர்களுக்கு 'மூடாக்கு' இடுதல்

அண்ணாச்சி.... யாருப்பா அங்க ...? ஓ... ராமசாமியா .... வாப்பா.... வா... ஆமா... என்ன ஊரே திரண்டு வந்த மாதிரி எல்லாரையும் கூட்டிட்டு வந்துட்ட...?!! ஆமாம் அண்ணாச்சி .... நீங்க சொன்னத எல்லார்கிட்டயும் சொன்னேன். முத்தம்மாவும் களை எடுக்க போறச்ச அவளுக்கு தெரிஞ்சவங்க கிட்டெல்லாம்...

Monday, August 24, 2015

வீட்டுத்தோட்டத்தில் கீரை வளர்ப்பது எப்படி?

சென்ற பதிவில் வர்த்தக ரீதியாக விவசாய நிலத்தில் கீரைத்தோட்டம் பயிரிடுவது பற்றி பார்த்தோம். இந்த பதிவில் வீட்டுத்தோட்டத்தில் கீரை வளர்ப்பு பற்றி கூறுகிறேன். உங்கள் வீட்டுத்தோட்டத்தில் இடத்திற்கு தகுந்தாற்போல் (இரண்டுக்கு இரண்டு அடி என்றோ,மூன்றுக்கு மூன்று அடி என்றோ அல்லது இரண்டு...

Saturday, August 22, 2015

கீரைத்தோட்டம் அமைப்பது எப்படி..?

நண்பர்கள் பலர் என்னிடம் கீரைத்தொட்டம் அமைப்பது எப்படி? என்பது பற்றியான வினாக்களைத்தான் அதிகம் தொடுக்கிறார்கள்...அவர்களுக்காக இந்த பதிவினை வெளியிடுகிறேன்.... நிலம் தயாரிப்பு முறை : முதலில் கீரைத்தோட்டம் போடுவதற்குண்டான நிலங்கள் பாசன வசதியுடன் கூடிய மேட்டுப்பாங்கான இடமாக இருக்க...

Friday, August 21, 2015

அமிர்த கரைசலால் ஏற்படும் நன்மைகள்

அமிர்த கரைசல் தெளித்தல் அதனால என்ன நன்மைகள்ன்னு கேட்டேல்லாம்மா.. சொல்றேன். கேளு... நம்ம நெலத்துல பாசன நீர் மூலம் இந்த கரைசல பாய்ச்சுரதால, உடனே அதுல உள்ள நுண்ணுயிரிகள் மண்ணுக்குள்ள போயி தங்களோட வேலைகள ஆரம்பிச்சிடும். நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்ன மாதிரி நம்ம மண்ணுக்குள்ள இயற்கையாவே...

அமிர்த கரைசல் பயன்படுத்தும் முறை

பாசனத்துக்கு தயாராக உள்ள அமிர்த கரைசல் ஏ... ராமசாமி ... வாப்பா.... வா. காலைல வான்னு சொன்னேன். அதுக்காக இவ்வளவு சீக்கிரமா அதிகாலைலேயே வந்துட்டியேப்பா.... ஆமாம்ணே... நீங்க சொன்னத நேத்து ராத்திரி நம்ம வீட்டுலயும் சொன்னேன். இதப்பத்தியேதான் ராத்திரி பூராம் பேச்சு.. என்னைய விட என்...

Thursday, August 20, 2015

அமிர்த கரைசல்

ஏ.. ராமசாமி .... இருக்கியாப்பா... ஆங்... இந்தா வந்துட்டேன்... ஆமாம்ணே.. இருக்கேன்..... அண்ணே.....நீரு சொன்ன மாதிரி எனக்கு இன்னும் ஆச்சர்யம் தாங்க முடியல. இன்னும் நெறைய உம்மகிட்ட தெரிஞ்சிக்கணும்... அந்த .. அமிர்த கரைசல்னு சொன்ணீகளே ... அத சொல்லுங்கண்ணே... நீ சொன்னிய .... ஒரு மாட்டு சாணத்த வச்சி ஒரு ஏக்கர் நெலத்துல எப்படி வெவசாயம் பாக்குறதுன்னு கேட்டெல்லா... அதுக்கு ஒரு வழிமுறைதான்...