ஏ .... என்ன ராமசாமி.. சொல்லி வச்ச மாதிரி எல்லாரும் ஒன்னு போல வந்துட்டீங்க. பரவாயில்லைப்பா ... உங்க ஆர்வத்த பாராட்டுறேன். சரி. வாங்க. எல்லாரும் அப்படி அப்படி உக்காருங்க. டேய் மாடசாமி, தள்ளி உக்காருப்பா. அவன இடிச்சிட்டு உக்காரதேப்பா... ம்ம். சரி.
அண்ணாச்சி பயிர் பாதுகாப்பு பத்தி சொல்றேன்னு சொன்னீங்கள்ள. நீங்க சொல்ல ஆரம்பிங்க. எல்லாரும் அமைதியாகிடுவாங்க. ஆரம்பிங்க அண்ணாச்சி...
சரிப்பா. பயிர் பாதுகாப்புன்னு சொல்றோம்ல... பயிர்கள எதில இருந்து பாதுகாக்கணும்?
பூச்சிகள் கிட்ட இருந்தும், நோய்கள் கிட்ட இருந்தும்தான் பயிர்கள நாம பாதுகாக்கணும். சரியா அண்ணாச்சி?
ரொம்ப சரியா சொன்ன. இதுல, நோய்கள்கிட்ட பாதுக்காக்கிரதுக்கு உண்டான சக்தி இயற்கையாவே நம்ம பயிர்களுக்கு உண்டு. எப்படின்னா, இயற்கை விவசாயம் செய்யும்போது பயிர்கள் நிலத்துல இருந்து தேவையான சத்துக்கள எடுத்து நோய் எதிர்ப்பு சக்திகளோட ஆரோக்யமா வளருது. அதனால நோய் தாக்குதல் என்பது ரொம்ப குறையாவே இருக்கும். நல்லா பாத்துக்கோங்க, இது இயற்கை விவசாயம் செய்யும் போதுதான் இந்த சக்தி கிடைக்கும். நீங்க ரசாயன விவசாயத்துல மண்ணும் மலட்டுத்தன்மை ஆகிடும். செடியும். அதிகமா நோய்வாய் பட்டுரும். அதனால இயற்கை விவசாயத்துல நோய் பாதுகாப்பு பெரிய பிரச்சனையே இல்ல. அடுத்ததா பூச்சிகள்கிட்ட இருந்து பாதுகாக்குறது ரொம்ப அவசியம். இத நல்லா கவனமா கேட்டுக்கோங்க.
பூச்சிகளை பத்தி முதல்ல சில விசயங்கள் நான் உங்களுக்கு சொல்றேன். பூச்சிகளுக்கு வாழ்க்கை பருவங்கள் என்பது நாலு வகையா உண்டு. முட்டைப்பருவம், புழுபருவம், கூட்டுப்புழு பருவம் கடைசியா பூச்சி பருவம். அதோட வாழ்க்கை சுழற்சி அப்படிங்கறது இந்த நாலு பருவத்துலதான் இருக்கும். பயிர்ல பூச்சி இருக்குதேன்னு சொல்லி பூச்சி மருந்து அடிப்பீங்க. நீங்க அப்படி அடிச்ச பதினைஞ்சி நாளைக்கு பூச்சி தெரியாது. திரும்பவும் பாத்தா பூச்சிகளா தெரியும். மறுபடியும் மருந்து அடிப்பீங்க. ஆனா இந்த செயல்ல நீங்க எத்தன தடவ மருந்து அடிச்சாலும் பூச்சிகள் கட்டுப்படாது. இது ஏன்னு எப்பவாவது நீங்க சிந்திச்சி பாத்தது உண்டா..? அதாவது, நாம மருந்து தெளிக்கும் போது, புழுக்கள் மேலேயும், பூச்சிகள் மேலேயும்தான் மருத்துகள் படும். இந்த இரண்டும்தான் செத்து போகும். ஆனா முட்டையும் , கூட்டுபுழுவும் இந்த மருந்துகள்கிட்ட இருந்து தப்பிச்சிடுது. இதுதான் திரும்பவும் நம்ம தோட்டத்துல பூச்சிகளா மறுபடியும் வளந்துடுது. அந்த பூச்சிகள் மறுபடியும் முட்டைகள் போடுது. நீங்க மருந்து அடிக்கீங்க. பூச்சி மட்டும் சாகுது. முட்டைகள் அப்படியே இருக்குது. இந்த சுழற்சிதான் பூச்சிகள் நம்ம தோட்டத்துல எப்பவும் இருக்குற மாதிரி இருக்குது.
சரி., இப்ப நான் இன்னொரு விஷயம் சொல்றேன். பூச்சிகள்ள நன்மை செய்யுற பூச்சி, தீமை செய்யுற பூச்சி அப்படின்னு ரெண்டு வகை உண்டு. இது யாருக்கெல்லாம் தெரியும்?
நன்மை செய்யுற பூச்சியா...? அது பாத்ததே இல்லியே அண்ணாச்சி..! அப்படி நமக்கு அது என்ன நன்மைய செஞ்சிற போகுது..?
அதாவது, தீமை செய்யுற பூச்சிகள திங்குறதுதான் இந்த நன்மை செய்யுற பூச்சிகள். அப்போ நன்மை செய்யுற பூச்சிகள் நம்ம தோட்டத்துல இருக்குறது நல்லதா? கெட்டதா? நல்லதுதான் இல்லையா? அப்போ நன்மை செய்யுற பூச்சிகள வர வைக்கணும்னா, ரசாயன மருந்துகள நாம தெளிக்காம இருக்கணும். அப்படி செஞ்சா, நன்மை செய்ற பூச்சிகளும் சேந்தே செத்து போய்டும்.
சரிதான் அண்ணாச்சி. அப்போ இந்த நன்மை செய்ற பூச்சிகள அதிகமாக்குனா இன்னும் நமக்கு நல்லதுல்லா...?
சரியா சொன்ன குமாரு. அப்படி நமக்கு நன்மை செய்ற பூச்சிகளை கண்டிப்பா அதிகமாக்கணும். அதுக்கு பயிர்களை சுத்தி ஆமணக்கு செடிகள நாம வளக்கணும். வேலி ஓரமாத்தான் வளக்கனுமே தவிர வயலுக்கு உள்ள வளக்கக்கூடாது. அதுபோக, வயலுக்கு உள்ள வரப்பு ஓரத்துல, மஞ்ச நிற பூ பூக்கக்கூடிய செடிகள வளக்கணும். உதாரணமா, சாமந்திப்பூ, துவரை இப்படிப்பட்ட செடிகள வளக்கலாம்.
ஆமணக்கு செடியும், துவர செடியும் பூச்சிகள எப்படி அண்ணாச்சி கட்டுப்படுத்தும். கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன்.
பயிர்களுக்கு தீமை செய்ற பூச்சிங்க முட்டை இடும்னு சொன்னேன்லா, இப்ப, இந்த ஆமணக்கு செடிகள வேலி ஓரத்துல போடுறதால, பூச்சிங்க நம்ம தோட்டத்துல வந்து முட்டை போடாம, ஆமணக்கு செடிகளோட இலைகளிலே முட்டைகள போட்டுரும். நம்ம பயிருக்குள்ள வராது. ஆமணக்கு செடிகள்ள போட்டுருக்க முட்டைக நம்ம கண்ணுக்கு தெரியும். அதனால அந்த முட்டைகள் இருக்குற இலைகள அப்படியே பறிச்சி, முட்டை பருவத்துலயே பூச்சிகள அழிச்சிடலாம். அத மீறி வளர்ற புழுக்கள புடிச்சி சாப்பிடுரதுக்காக, நன்மை செய்ற பூச்சிகளான தேனீக்களும், குழவிகளும் நம்ம வயல தேடி ஓடிவரும். இப்படி ஓடி வரதுக்கான காரணம், நாம வளக்கக்கூடிய மஞ்ச நிற பூக்கள்தான்.
அண்ணாச்சி, இந்த மஞ்ச நிற பூக்களுக்கு பதிலா வேற நிறத்துல பூக்கக்கூடிய பூச்செடிகள போடலாம்ல..?
அதுதான் இல்லை. மஞ்ச நிறம்தான் பூச்சிகள அதிகமா
கவர்ந்து இழுக்கும். தேனீக்கள் அதிகமா வரதால, நம்ம பயிர்கள்ள மகரந்த சேர்க்கை நடந்து மகசூல் கூடுது. குழவிகள் அதிகமா வரதால, நாம அழிச்ச முட்டைகள்ள இருந்து தப்பிச்சி வந்த மத்த புழுக்கள, குழவி தன்னோட உணவுக்காகவும், தான் முட்டை இட்டு குஞ்சி பொரிக்கரதுக்காகவும் அந்த புழுக்கள தூக்கிட்டு போய்டும்.
இப்ப நம்ம பயிர்கள்ள பூச்சிகளோட தாக்குதல முக்காவாசி கட்டுப்படுத்திட்டோமா..? இதுபோக, மீதி இருக்குற பூச்சிகளையும் நாம மூலிகை பூச்சி விரட்டி மூலமா முழுசா கட்டுப்படுத்திடலாம். இவ்வளவுதாம்பா.... இதுக்கு போயி நீங்க ரசாயன உரத்தையும், பூச்சி கொல்லி விஷத்தையும் பயிர்ல தெளிச்சி, நாம சம்பாதிச்ச பணத்தையெல்லாம் உரக்கம்பெனி முதலாளிகளுக்குத்தான் கொடுத்துட்டு இருக்கோம். அவங்க கோடீஸ்வரனா இருக்காங்க. நாம கடனாளியா இருக்கோம்.
சரியா சொன்னீங்க அண்ணாச்சி.... இது எவ்வளவு சுலபமான வேல. இதனால நம்மளோட பணமும் மிச்சமாகுது. விஷம் இல்லாத உணவும் கிடைக்குது. மண்ணும் நல்ல வளமா ஆகிருதுல்லா...! அண்ணாச்சி... மிச்சம் இருக்குற பூச்சிகள, மூலிகை பூச்சி விரட்டி மூலமா வெரட்டிரலாம்னு சொன்னீங்கள்ள, அது எப்படி தயாரிக்கணும் ? என்ன ? யாதுன்னு அதப்பத்தியும் கொஞ்சம் விவரமா சொல்லிருங்களேன் அண்ணாச்சி.
சரிப்பா... சொல்லுறேன். ஆனா எனக்கு கொஞ்சம் வயல்ல வேலை இருக்கு. நான் போயிட்டு வந்து ராத்திரி விவரமா இதப்பத்தி பேசுவோம். சரியா...? அப்போ... கிளம்ப்புவோமா...?
அண்ணாச்சி பயிர் பாதுகாப்பு பத்தி சொல்றேன்னு சொன்னீங்கள்ள. நீங்க சொல்ல ஆரம்பிங்க. எல்லாரும் அமைதியாகிடுவாங்க. ஆரம்பிங்க அண்ணாச்சி...
சரிப்பா. பயிர் பாதுகாப்புன்னு சொல்றோம்ல... பயிர்கள எதில இருந்து பாதுகாக்கணும்?
பூச்சிகள் கிட்ட இருந்தும், நோய்கள் கிட்ட இருந்தும்தான் பயிர்கள நாம பாதுகாக்கணும். சரியா அண்ணாச்சி?
ரொம்ப சரியா சொன்ன. இதுல, நோய்கள்கிட்ட பாதுக்காக்கிரதுக்கு உண்டான சக்தி இயற்கையாவே நம்ம பயிர்களுக்கு உண்டு. எப்படின்னா, இயற்கை விவசாயம் செய்யும்போது பயிர்கள் நிலத்துல இருந்து தேவையான சத்துக்கள எடுத்து நோய் எதிர்ப்பு சக்திகளோட ஆரோக்யமா வளருது. அதனால நோய் தாக்குதல் என்பது ரொம்ப குறையாவே இருக்கும். நல்லா பாத்துக்கோங்க, இது இயற்கை விவசாயம் செய்யும் போதுதான் இந்த சக்தி கிடைக்கும். நீங்க ரசாயன விவசாயத்துல மண்ணும் மலட்டுத்தன்மை ஆகிடும். செடியும். அதிகமா நோய்வாய் பட்டுரும். அதனால இயற்கை விவசாயத்துல நோய் பாதுகாப்பு பெரிய பிரச்சனையே இல்ல. அடுத்ததா பூச்சிகள்கிட்ட இருந்து பாதுகாக்குறது ரொம்ப அவசியம். இத நல்லா கவனமா கேட்டுக்கோங்க.
பூச்சிகளை பத்தி முதல்ல சில விசயங்கள் நான் உங்களுக்கு சொல்றேன். பூச்சிகளுக்கு வாழ்க்கை பருவங்கள் என்பது நாலு வகையா உண்டு. முட்டைப்பருவம், புழுபருவம், கூட்டுப்புழு பருவம் கடைசியா பூச்சி பருவம். அதோட வாழ்க்கை சுழற்சி அப்படிங்கறது இந்த நாலு பருவத்துலதான் இருக்கும். பயிர்ல பூச்சி இருக்குதேன்னு சொல்லி பூச்சி மருந்து அடிப்பீங்க. நீங்க அப்படி அடிச்ச பதினைஞ்சி நாளைக்கு பூச்சி தெரியாது. திரும்பவும் பாத்தா பூச்சிகளா தெரியும். மறுபடியும் மருந்து அடிப்பீங்க. ஆனா இந்த செயல்ல நீங்க எத்தன தடவ மருந்து அடிச்சாலும் பூச்சிகள் கட்டுப்படாது. இது ஏன்னு எப்பவாவது நீங்க சிந்திச்சி பாத்தது உண்டா..? அதாவது, நாம மருந்து தெளிக்கும் போது, புழுக்கள் மேலேயும், பூச்சிகள் மேலேயும்தான் மருத்துகள் படும். இந்த இரண்டும்தான் செத்து போகும். ஆனா முட்டையும் , கூட்டுபுழுவும் இந்த மருந்துகள்கிட்ட இருந்து தப்பிச்சிடுது. இதுதான் திரும்பவும் நம்ம தோட்டத்துல பூச்சிகளா மறுபடியும் வளந்துடுது. அந்த பூச்சிகள் மறுபடியும் முட்டைகள் போடுது. நீங்க மருந்து அடிக்கீங்க. பூச்சி மட்டும் சாகுது. முட்டைகள் அப்படியே இருக்குது. இந்த சுழற்சிதான் பூச்சிகள் நம்ம தோட்டத்துல எப்பவும் இருக்குற மாதிரி இருக்குது.
சரி., இப்ப நான் இன்னொரு விஷயம் சொல்றேன். பூச்சிகள்ள நன்மை செய்யுற பூச்சி, தீமை செய்யுற பூச்சி அப்படின்னு ரெண்டு வகை உண்டு. இது யாருக்கெல்லாம் தெரியும்?
நன்மை செய்யுற பூச்சியா...? அது பாத்ததே இல்லியே அண்ணாச்சி..! அப்படி நமக்கு அது என்ன நன்மைய செஞ்சிற போகுது..?
அதாவது, தீமை செய்யுற பூச்சிகள திங்குறதுதான் இந்த நன்மை செய்யுற பூச்சிகள். அப்போ நன்மை செய்யுற பூச்சிகள் நம்ம தோட்டத்துல இருக்குறது நல்லதா? கெட்டதா? நல்லதுதான் இல்லையா? அப்போ நன்மை செய்யுற பூச்சிகள வர வைக்கணும்னா, ரசாயன மருந்துகள நாம தெளிக்காம இருக்கணும். அப்படி செஞ்சா, நன்மை செய்ற பூச்சிகளும் சேந்தே செத்து போய்டும்.
சரிதான் அண்ணாச்சி. அப்போ இந்த நன்மை செய்ற பூச்சிகள அதிகமாக்குனா இன்னும் நமக்கு நல்லதுல்லா...?
சரியா சொன்ன குமாரு. அப்படி நமக்கு நன்மை செய்ற பூச்சிகளை கண்டிப்பா அதிகமாக்கணும். அதுக்கு பயிர்களை சுத்தி ஆமணக்கு செடிகள நாம வளக்கணும். வேலி ஓரமாத்தான் வளக்கனுமே தவிர வயலுக்கு உள்ள வளக்கக்கூடாது. அதுபோக, வயலுக்கு உள்ள வரப்பு ஓரத்துல, மஞ்ச நிற பூ பூக்கக்கூடிய செடிகள வளக்கணும். உதாரணமா, சாமந்திப்பூ, துவரை இப்படிப்பட்ட செடிகள வளக்கலாம்.
ஆமணக்கு செடியும், துவர செடியும் பூச்சிகள எப்படி அண்ணாச்சி கட்டுப்படுத்தும். கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன்.
பயிர்களுக்கு தீமை செய்ற பூச்சிங்க முட்டை இடும்னு சொன்னேன்லா, இப்ப, இந்த ஆமணக்கு செடிகள வேலி ஓரத்துல போடுறதால, பூச்சிங்க நம்ம தோட்டத்துல வந்து முட்டை போடாம, ஆமணக்கு செடிகளோட இலைகளிலே முட்டைகள போட்டுரும். நம்ம பயிருக்குள்ள வராது. ஆமணக்கு செடிகள்ள போட்டுருக்க முட்டைக நம்ம கண்ணுக்கு தெரியும். அதனால அந்த முட்டைகள் இருக்குற இலைகள அப்படியே பறிச்சி, முட்டை பருவத்துலயே பூச்சிகள அழிச்சிடலாம். அத மீறி வளர்ற புழுக்கள புடிச்சி சாப்பிடுரதுக்காக, நன்மை செய்ற பூச்சிகளான தேனீக்களும், குழவிகளும் நம்ம வயல தேடி ஓடிவரும். இப்படி ஓடி வரதுக்கான காரணம், நாம வளக்கக்கூடிய மஞ்ச நிற பூக்கள்தான்.
அண்ணாச்சி, இந்த மஞ்ச நிற பூக்களுக்கு பதிலா வேற நிறத்துல பூக்கக்கூடிய பூச்செடிகள போடலாம்ல..?
அதுதான் இல்லை. மஞ்ச நிறம்தான் பூச்சிகள அதிகமா
கவர்ந்து இழுக்கும். தேனீக்கள் அதிகமா வரதால, நம்ம பயிர்கள்ள மகரந்த சேர்க்கை நடந்து மகசூல் கூடுது. குழவிகள் அதிகமா வரதால, நாம அழிச்ச முட்டைகள்ள இருந்து தப்பிச்சி வந்த மத்த புழுக்கள, குழவி தன்னோட உணவுக்காகவும், தான் முட்டை இட்டு குஞ்சி பொரிக்கரதுக்காகவும் அந்த புழுக்கள தூக்கிட்டு போய்டும்.
இப்ப நம்ம பயிர்கள்ள பூச்சிகளோட தாக்குதல முக்காவாசி கட்டுப்படுத்திட்டோமா..? இதுபோக, மீதி இருக்குற பூச்சிகளையும் நாம மூலிகை பூச்சி விரட்டி மூலமா முழுசா கட்டுப்படுத்திடலாம். இவ்வளவுதாம்பா.... இதுக்கு போயி நீங்க ரசாயன உரத்தையும், பூச்சி கொல்லி விஷத்தையும் பயிர்ல தெளிச்சி, நாம சம்பாதிச்ச பணத்தையெல்லாம் உரக்கம்பெனி முதலாளிகளுக்குத்தான் கொடுத்துட்டு இருக்கோம். அவங்க கோடீஸ்வரனா இருக்காங்க. நாம கடனாளியா இருக்கோம்.
சரியா சொன்னீங்க அண்ணாச்சி.... இது எவ்வளவு சுலபமான வேல. இதனால நம்மளோட பணமும் மிச்சமாகுது. விஷம் இல்லாத உணவும் கிடைக்குது. மண்ணும் நல்ல வளமா ஆகிருதுல்லா...! அண்ணாச்சி... மிச்சம் இருக்குற பூச்சிகள, மூலிகை பூச்சி விரட்டி மூலமா வெரட்டிரலாம்னு சொன்னீங்கள்ள, அது எப்படி தயாரிக்கணும் ? என்ன ? யாதுன்னு அதப்பத்தியும் கொஞ்சம் விவரமா சொல்லிருங்களேன் அண்ணாச்சி.
சரிப்பா... சொல்லுறேன். ஆனா எனக்கு கொஞ்சம் வயல்ல வேலை இருக்கு. நான் போயிட்டு வந்து ராத்திரி விவரமா இதப்பத்தி பேசுவோம். சரியா...? அப்போ... கிளம்ப்புவோமா...?
0 Comment to "பயிர் பாதுகாப்பு"
Post a Comment