Friday, August 21, 2015

அமிர்த கரைசலால் ஏற்படும் நன்மைகள்


அமிர்த கரைசல் தெளித்தல்

அதனால என்ன நன்மைகள்ன்னு கேட்டேல்லாம்மா.. சொல்றேன். கேளு...
நம்ம நெலத்துல பாசன நீர் மூலம் இந்த கரைசல பாய்ச்சுரதால, உடனே அதுல உள்ள நுண்ணுயிரிகள் மண்ணுக்குள்ள போயி தங்களோட வேலைகள ஆரம்பிச்சிடும். நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்ன மாதிரி நம்ம மண்ணுக்குள்ள இயற்கையாவே நெறைய சத்துக்கள் இருக்குப்பா ... அதாவது, தழை சத்து, மணி சத்து, சாம்பல் சத்து, இது போக நெறைய சத்து இருக்கு. இப்படி எல்லா சத்துக்களையும் எடுத்து பயிர்களுக்கு கொடுக்க நம்ம நுண்ணுயிரிகள் தயார் ஆகிடுது.

தயார் ஆகிடுதுன்னா என்ன அண்ணாச்சி ...?

அதாம்பா ... ஏற்கனவே சொன்னேன்ல... உன் வீட்டுல சமையலுக்கு உண்டான காய்கறிகள் எல்லாம் இருந்தாலும் யாராவது சமச்சி போட்டாதான் நம்மலால சாப்பிட முடியும்னு... அதே மாதிரிதான் இந்த நுண்ணுயிரிகள், மண்ணுக்குள்ள இருக்குற சத்துக்கள, பயிரோட வேர்கள்  எடுத்துக்குற மாதிரி மாத்தி கொடுக்குது. அதுவும் இல்லாம, மண்ணோட வளமே மக்குகள் தான். ஒரு செடியோட வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் எல்லாமே மக்குகள் கிட்டயிருந்துதான் வேர்கள் மூலமா பயிர்கள் எடுத்துக்கிடுது. அதனால, பயிர்களுக்கு இடையே மூடாக்கு போடணும். இதைப்பத்தி நான் அப்புறமா சொல்லுதேனே...  அப்புறம் இந்த மக்குகள் மூலமாவும் இன்னொரு லாபம் இருக்கு. என்னன்னா... காத்துல உள்ள ஈர பதத்த மக்குகள் உறிஞ்சி மண்ணுகள ஈரத்தன்மையோடவே வச்சிருக்கும். அரை அடியில மண்ணு மேல மக்கு இருந்துச்சி அப்படின்னா, ஒரு கிலோ மக்கு ஒரு நாளைக்கு அஞ்சு லிட்டர் தண்ணிய காத்துல இருந்து உறிஞ்சி மண்ணுல சேமிச்சி வச்சிருக்கும்பா. இதனால நமக்கு குறைவான தண்ணீரே செலவாகும்.

அப்ப மண்ணுல எப்பவும் தண்ணி நின்னுட்டேவா இருக்கும்...?

அப்படி இல்லப்பா, அந்த மண்ணு எப்பவும் ஈரப்பதமா இருக்கும்.

பாத்தியாப்பா.. இது வரைக்கும் உனக்கு செலவு எவ்வளவு மிச்சமாச்சின்னு பாத்தியா...?

ஆமாம் அண்ணாச்சி... முதல்ல நான் உரம் போடுற செலவு மிச்சமாக்கி காமிச்சீங்க. அப்புறம் தண்ணி குறைவா செலவாகும்னு சொல்லி இருக்கீங்க...

ஆமாம்பா... இன்னும் செலவு மிச்சம் பிடிக்கிறத பத்தி நெறைய சொல்றேன்.

கரைசல பாசனம் மூலமா வரக்கூடிய நன்மைகளை சொல்லிட்டீங்க. கரைசல தெளிக்கிறதால என்ன நன்மைன்னு சொல்லவே இல்லையே அண்ணே..

வரேம்மா... அத பத்திதான் அடுத்தால சொல்லனும்னு இருக்கேன்... நீ அமிர்த கரைசல தெளிக்குறதுனால, அது வளர்ச்சி ஊக்கியாக மாறி, நோய் எதிர்ப்பு சக்தி பயிருக்கு அதிகமா கொடுத்து, நல்ல மகசூலை நமக்கு தருது. அப்புறம், இலைகள் மேல இருக்குற நுண்ணுயிரிகள், காற்றில் உள்ள தழை சத்தை எடுத்து இலைகள் மூலமா பயிருக்கு கொடுக்குது. இன்னொன்னு பயிர்கள் தனக்கு வேர்கள் மூலமா கிடைக்கிற தண்ணீரை இலைகள் மூலமா நீர் ஆவியாகி போயி பயிரெல்லாம் வாடி வதங்கி போகுதுங்கறது உங்களுக்கு தெரியும்லா, அப்படி ஆவியாகி போறத இந்த இலை மேல இருக்குற நுண்ணுயிரிகள் தடுத்து நீர்ச்சத்த குறையாம பாத்துக்கிடும். இதனால பயிரும் அதிகம் வாட்டம் இல்லாம இருக்கும். அது சரி ... நீ என்ன.. ரொம்ப வாடிபோயி இருக்குற மாதிரி இருக்கு. காலைல சாப்பிட நேரம் வந்துட்டு... அதனாலயா...?

அது கிடக்கட்டும்ணே... சாப்பாடுதான் எப்பன்னாலும் சாப்பிடலாமே.. எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்குது..

என்ன ஆச்சர்யம்பா..?

இல்ல.. இதுல இவ்ளோ இருக்கா? நாங்க இதுவர இதப்பத்தியெல்லாம் தெரியாமலே இருந்திருக்கோமே  அண்ணாச்சி....

இது மட்டும் இல்லப்பா.... இன்னும் இருக்கு... முதல்ல நீயும் உன் வீட்டுக்காரியும் போயி சாப்பிட்டுட்டு வாங்க. எனக்கும் பசிக்குதுல்ல... அப்படி சாப்பிட்டுட்டு வரும் போது, இதப்பத்தி உனக்கு தெரிஞ்ச ஆளுங்களுக்கெல்லாம் இந்த இயற்கை வெவசாயத்த பத்தி சொல்லி அவங்களையும் வர சொல்லு... பாவம் நம்ம பசங்க... ரசாயன உரம் போட்டு அவங்களும் பாழாகி, நம்ம நெலத்தையும் பாழாக்கிட்டு இருக்காங்க. அவங்களையும் இந்த பக்கம் திசை திருப்பி கொண்டு வாப்பா....

சரிங்க அண்ணாச்சி...

என்ன முத்தம்மா ... நீயும் உனக்கு தெரிஞ்சவங்கள கூட்டிட்டு வாம்மா..

சரிண்ணே.. வரட்டுமாண்ணே...

Share this

Artikel Terkait

0 Comment to "அமிர்த கரைசலால் ஏற்படும் நன்மைகள்"

Post a Comment