வணக்கம் அண்ணாச்சி ....! வாங்க.. வாங்க..!
ஏ... குமாரு .... வாப்பா. வா... என்ன, நான் வரதுக்கு முன்னாடியே நீங்க எல்லாரும் என் வீட்டுல வந்து நிக்கீங்க போலிருக்கு... வாங்க... வாங்க... எல்லாரும் வாங்க.... ஏ... மரியாதையெல்லாம் வேண்டாம்பா.. உக்காருங்க.. உக்காருங்க... அப்படியே உக்காருங்க....
சரிங்க அண்ணாச்சி.... நீங்க வேணா உள்ளார போயி காலு கை கழுவிட்டு வாங்க. நாங்க காத்திருக்கோம்.
அதுக்கென்னப்பா.. அதான் இங்க தொட்டியிலேயே தண்ணி வச்சிருக்கேனே.. இப்படியே அலம்பிட்டு உக்காருதேன்... ம்ம்ம்.. சரி.. நான் உங்களுக்கு இப்ப எத பத்தி சொல்லுறேன்னு சொன்னேன்....
அண்ணாச்சி... பூச்சிகள வெரட்டதுக்கு ஏதோ மூலிகைல செஞ்சி வெரட்டணும்னு சொன்னீங்களே .... அதெல்லாம் நம்ம பயிருக்கு தேவையா அண்ணாச்சி... அதான் ஏற்கனவே முக்கால்வாசி பூச்சிங்கள கொன்னுட்டோம்னு சொன்னீங்கள்ள.., அப்புறம் எதுக்கு....? கடையில ஏதாவது மருந்தை வாங்கி, நீங்க சொன்ன மாதிரி அந்த மிச்சம் இருக்குற பூச்சிகளையும் கொன்னுரலாம்லா..? கொஞ்சம் இருக்குற பூச்சிய கொல்ல கொஞ்சம் மருந்து வாங்குனா போதும்.. செலவு மிச்சம் ஆகும்லா அண்ணாச்சி...
போடா பொசக்கெட்ட பயல... என்ன பேசுத..? நீங்கல்லாம் இப்ப பூச்சி வெரட்டுரதுக்குன்னு சொல்லி ரசாயன பூச்சி கொல்லி பயன்படுத்துறீங்களே... அதனால பூச்சி மட்டுமா சாவுது.. நம்ம பயிரும்லா கூட சேந்து நஞ்சா போயிருது... அந்த நஞ்சான தானியத்ததான நாமளும் சாப்பிடுதோம். இதனால நம்ம உடம்பும்தான் நஞ்சா போயிருதே... இதனால பாதிப்பு உடனடியா இல்லாட்டாலும் நம்மள கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டேதான் இருக்கும்பா. உயிர்க்கொல்லி நோயான நீரழிவு நோய், ரத்த அழுத்த நோய் அப்புறம் புற்றுநோய் இதெல்லாமே நமக்கு தெரியாமலே நமக்குள்ளே வந்துட்டு இருக்கும். இன்னொன்னு தெரியுமாடா... நம்ம உடம்புல இந்த நஞ்சி சேந்ததால புள்ளைக்கு கொடுக்குற தாய்ப்பால் கூட நஞ்சாத்தான் இருக்குன்னு இப்ப ஆராய்ச்சில கண்டுபுடிச்சிருக்காங்க. ஏன்டா... உனக்கு அடுத்தால வளர்ற தலைமுறைய கூட நஞ்சாதான் வளக்கனுமா...? போதும்பா.... பழயபடி யாருக்கும் பாதிப்ப கொடுக்காத நம்மளோட பாரம்பரியதுக்கே போவோம்பா...
அண்ணாச்சி அவன் கிடக்கான் அண்ணாச்சி... நீங்க சொல்லுங்க...
சரி. இப்ப கவனமா கேட்டுக்கோங்க. இத பயன்படுத்துறது ரொம்ப சுலபம். யாருக்கும் எதுக்கும் பாதிப்பே கிடையாது. இந்த மூலிகை பூச்சி வெரட்டி ரெண்டு வகைல நாம தயாரிக்கனும்.
முதல் முறை:
நொச்சி இலை - 1 கிலோ
எருக்கன் இலை - 1 கிலோ
சோத்துகத்தாலை சோறு - 1 கிலோ
வேப்ப முத்து - 1 கிலோ
ஆடாதொடை இலை - 1 கிலோ
இதை எல்லாத்தையும் தனித்தனியா உரல்ல இடிச்சி சாறு எடுக்கணும். இதுல இருந்து 7 கிலோ சாறு நமக்கு கிடைக்கும். இந்த சாறை 100 லிட்டர் தண்ணில கலந்து தெளிக்கணும். இது ஒரு ஏக்கருக்கான அளவு. உங்க இடத்த பொறுத்து உங்களுக்கு தேவையானத கூட குறைச்சி போட்டு செஞ்சிக்கோங்க. இன்னொரு விஷயம், இத இருப்பு வச்சி உபயோகிக்கக்கூடாது.. தேவையான நேரத்துல தயார் செஞ்சி உடனே உபயோகிச்சிரனும். சரியா..?
இன்னொரு முறை என்னன்னா,
நாட்டு பூண்டு - 1 கிலோ
பச்சை மிளகாய் - 1/2 கிலோ
இஞ்சி - 1/2 கிலோ
புகையிலை - 1/2 கிலோ
வேப்பங்கொட்டை சாறு - 200 மில்லி
மண்ணெண்ணெய் - 100 மில்லி
காதி சோப்பு (300 கிராம்) - 1 எண்ணம்
முத நாள் ராத்திரி 3 லிட்டர் தண்ணிய எடுத்து, அத நல்லா கொதிக்க வச்சி, அதுல புகையிலைய உள்ள போட்டு, அப்படியே தனியா எடுத்து வச்சிருங்க. அடுத்தால, வெள்ளப்பூடை அரைச்சி, மண்ணெண்ணெய் கூட சேந்து கலந்து அதையும் தனியா எடுத்து வச்சிருங்க. மறுநாள் காலைல, வேப்பங்கொட்டை சாறையும், காதி சோப்பையும் ஒரு அரை லிட்டர் தண்ணி எடுத்து அதுல போட்டு நல்லா கரைக்கணும். இப்ப மீதி இருக்குறது எது..? பச்சை மிளகாயும், இஞ்சியும்... இதையும் அரைச்சி தனியா எடுத்து வச்சிருங்க. அடுத்தால, நாம முத நாள் ராத்திரி புகையிலை போட்டு தண்ணி சேத்து வச்சிருந்தோம்ல, அது .., அப்புறம் அந்த பூண்டு கரைசல்.., காலைல சேத்த சோப்புக்கரைசல், இப்ப அரைச்ச இஞ்சி மிளகாய் விழுது இப்படி எல்லாத்தையும் ஒண்ணா சேத்து, நல்லா கலக்கி, ரெண்டு தடவ நல்லா வடிகட்டி எடுத்து வச்சுக்கோங்க. அடுத்தாப்புல, இப்படி நாம தயார் பண்ணுன கரைசல, ஒரு நூறு லிட்டர் தண்ணியோட சேத்துட்டா அது நம்ம பயிர்க்கு தேவையான கரைசல் தயார். இதுதான் இயற்கை முறைல செய்யக்கூடிய பூச்சி விரட்டி. இதுவும் ஒரு ஏக்கருக்கு உண்டான அளவுதான். இப்ப நான் உங்களுக்கு ரெண்டு வகையான பூச்சி வெரட்டி சொல்லிக்கொடுத்துருக்கேன். இந்த ரெண்டு வகை கரைசலயும் பூச்சி தாக்குதலை பொறுத்து, பதினைஞ்சி நாள் இடைவேளைல பயிர்களுக்கு மாறி மாறி தெளிச்சிட்டு வரலாம். தெளிக்கும் போது இலைகள் எல்லாத்துலயும் நல்ல படும்படி நல்லா தெளிச்சிட்டு வந்துருங்க. அவ்வளவுதாம்பா.. இதுதான் மூலிகை பூச்சி விரட்டி தயார் பண்றதும், பயன் படுத்துற முறையும்.
அது சரி அண்ணாச்சி... இப்படி தெளிச்சா, பூச்சிங்க எல்லாம் செத்து போயிருமா..?
கண்டிப்பா பூச்சிங்க சாகாது....
என்ன அண்ணாச்சி சொல்லுதீக... இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் பூச்சி வெரட்டிதான...?
ஆங்... அதான். பூச்சி வெரட்டிதான்... பூச்சிக்கொல்லி கிடையாது. பூச்சிங்கள வெரட்டத்தான் செய்யும். சாகடிக்காது. புரியுதா...?
அதாவது, நீங்க தெளிக்கிற இந்த கரைசல், இலைகள் மேல நல்லா படிஞ்சிருக்கும். நம்ம பூச்சி வெரட்டி கரைசல்ல உரைப்பும், கசப்பும் சேத்துருக்கோம் அப்படித்தான... இந்த வாசனை பூச்சிகள செடி மேல உக்காராம வெரட்டிரும். அதையும் மீறி பயிருக்குள்ள வந்து இலைகள கடிக்க ஆரம்பிச்சிட்டு அப்படின்னா, கரைசல்ல இருக்குற கசப்புத்தன்மை பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மைய உருவாக்கிரும். இனப்பெருக்கம் நடக்காது.
இதுதான் இயற்கை முறைல பயிரை பாதுக்காக்குற முறை. இப்படி செஞ்சா நமக்கு ஏதும் பாதிப்பு வருமா...? செலவு அதிகமா வருமா...? வரவே வராது... இனிமே நீங்க.., நான் சொன்ன மாதிரி, இப்படித்தான் செய்வீங்கன்னு எதிர்பார்கட்டுமா...?
நிச்சயமா அண்ணாச்சி... அதுக்குத்தான இவ்வளவு தூரம் வந்து இவ்ளோ நாளா இந்த நல்ல விசயத்த கேட்டுட்டு இருக்கோம்.
சரி.. இயற்கை விவசாயத்த பத்தி சொல்லிட்டேன். அதுக்கு நீங்க எனக்கு என்ன தட்சணை கொடுக்க போறீங்க...?
தட்சனையா.. என்ன அண்ணாச்சி சொல்லுதீங்க...? செலவ குறைக்கிறது எப்படின்னு சொல்லிக்கொடுத்துட்டு, ஆரம்பத்துலயே செலவோட ஆரம்பிக்கீகளே...
நான் கேக்குற தட்சணைய உங்களால கண்டிப்பா கொடுக்க முடியும்...
அப்படியா..? அப்ப சரி. கேளுங்க. முடிஞ்சா தந்துருதோம்.
நீங்க இயற்கை விவசாயம் செஞ்சி, பலன் அடைஞ்சிட்டு, இந்த முறைய எல்லாத்துக்கும் சொல்லி, அவங்களையும் இயற்கை விவசாயத்துக்கு மாத்தி கொண்டாரணும். இதுதான் எனக்கு நீங்க தர வேண்டிய தட்சணை. சரியா..? தந்துடுவீங்களா..?
கண்டிப்பா அண்ணாச்சி.... பக்கத்து ஊரு, எனக்கு தெரிஞ்சவன், தெரியாதவன் எல்லாத்துட்டேயும் சொல்லி, இப்படித்தான் வெவசாயம் பண்ணனும்னு அவங்களையும் இயற்கை வெவசாயத்துக்கே மாத்திக்காமிக்கிறோம். ஏ மாடசாமி, குமாரு, மணி.., என்ன அண்ணாச்சி சொல்ற மாதிரி நாம எல்லாரும் செஞ்சிடலாம்லா....?
செஞ்சிருவோம்... செஞ்சிருவோம்....
சரி.... அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். இத்தன வருஷமா நீங்க ரசாயன விவசாயம் பண்ணுனதால, நெலத்துல நுண்ணுயிரிகள் இல்லாம எல்லாமே அழிஞ்சி போயிருக்கும் இல்லியா? அதனால நுண்ணுயிரிகள நெலத்துல பெருகுறதுக்கு சில காலம் புடிக்கும். அதனால, தொடர்ந்து அமிர்தக்கரைசல நெலத்துக்கு கொடுத்துட்டே வந்தீங்க அப்படின்னா, நுண்ணுயிரிகளும் பெருகிட்டே இருக்கும். முதல்ல நீங்க, உங்க நெலத்துல, கொஞ்சம் இடத்த பிரிச்சி, அதுல இயற்கை வெவசாயம் செஞ்சி பாருங்க. அப்புறம் உங்களுக்கே தெரியும், செலவு குறையிறதும், தரமான தானியங்களோ, காய்கறிகளோ உற்பத்தி ஆகுறதும்... திருப்தியான பிறகு, முழுசா எல்லா இடத்துலயும் பயிர் பண்ண ஆரம்பிச்சிக்கோங்க...
சரிங்க அண்ணாச்சி... அப்படியே செய்றோம்...
இப்ப உங்களுக்கு எல்லாம் புரிஞ்ச மாதிரிதான் இருக்கும். நீங்க நிலத்துல இறங்கி வேலை செய்ய ஆரம்பிக்கும் போதுதான் நெறைய சந்தேகம்லாம் வரும். அதனால, உங்களுக்கு வருற சந்தேகத்த, அப்பப்ப என்கிட்டே கேளுங்க. நானும் சொல்லுதேன். சரி. கோயில் திருவிழா வருதுல்லா, சாமிய கும்பிட்டுட்டு நல்ல படியா இயற்கை விவசாயத்த ஆரம்பிங்க... எல்லாரும் நல்லா செழிப்பா இருங்கப்பா.. வரட்டுமா...
ஏ... குமாரு .... வாப்பா. வா... என்ன, நான் வரதுக்கு முன்னாடியே நீங்க எல்லாரும் என் வீட்டுல வந்து நிக்கீங்க போலிருக்கு... வாங்க... வாங்க... எல்லாரும் வாங்க.... ஏ... மரியாதையெல்லாம் வேண்டாம்பா.. உக்காருங்க.. உக்காருங்க... அப்படியே உக்காருங்க....
சரிங்க அண்ணாச்சி.... நீங்க வேணா உள்ளார போயி காலு கை கழுவிட்டு வாங்க. நாங்க காத்திருக்கோம்.
அதுக்கென்னப்பா.. அதான் இங்க தொட்டியிலேயே தண்ணி வச்சிருக்கேனே.. இப்படியே அலம்பிட்டு உக்காருதேன்... ம்ம்ம்.. சரி.. நான் உங்களுக்கு இப்ப எத பத்தி சொல்லுறேன்னு சொன்னேன்....
அண்ணாச்சி... பூச்சிகள வெரட்டதுக்கு ஏதோ மூலிகைல செஞ்சி வெரட்டணும்னு சொன்னீங்களே .... அதெல்லாம் நம்ம பயிருக்கு தேவையா அண்ணாச்சி... அதான் ஏற்கனவே முக்கால்வாசி பூச்சிங்கள கொன்னுட்டோம்னு சொன்னீங்கள்ள.., அப்புறம் எதுக்கு....? கடையில ஏதாவது மருந்தை வாங்கி, நீங்க சொன்ன மாதிரி அந்த மிச்சம் இருக்குற பூச்சிகளையும் கொன்னுரலாம்லா..? கொஞ்சம் இருக்குற பூச்சிய கொல்ல கொஞ்சம் மருந்து வாங்குனா போதும்.. செலவு மிச்சம் ஆகும்லா அண்ணாச்சி...
போடா பொசக்கெட்ட பயல... என்ன பேசுத..? நீங்கல்லாம் இப்ப பூச்சி வெரட்டுரதுக்குன்னு சொல்லி ரசாயன பூச்சி கொல்லி பயன்படுத்துறீங்களே... அதனால பூச்சி மட்டுமா சாவுது.. நம்ம பயிரும்லா கூட சேந்து நஞ்சா போயிருது... அந்த நஞ்சான தானியத்ததான நாமளும் சாப்பிடுதோம். இதனால நம்ம உடம்பும்தான் நஞ்சா போயிருதே... இதனால பாதிப்பு உடனடியா இல்லாட்டாலும் நம்மள கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டேதான் இருக்கும்பா. உயிர்க்கொல்லி நோயான நீரழிவு நோய், ரத்த அழுத்த நோய் அப்புறம் புற்றுநோய் இதெல்லாமே நமக்கு தெரியாமலே நமக்குள்ளே வந்துட்டு இருக்கும். இன்னொன்னு தெரியுமாடா... நம்ம உடம்புல இந்த நஞ்சி சேந்ததால புள்ளைக்கு கொடுக்குற தாய்ப்பால் கூட நஞ்சாத்தான் இருக்குன்னு இப்ப ஆராய்ச்சில கண்டுபுடிச்சிருக்காங்க. ஏன்டா... உனக்கு அடுத்தால வளர்ற தலைமுறைய கூட நஞ்சாதான் வளக்கனுமா...? போதும்பா.... பழயபடி யாருக்கும் பாதிப்ப கொடுக்காத நம்மளோட பாரம்பரியதுக்கே போவோம்பா...
அண்ணாச்சி அவன் கிடக்கான் அண்ணாச்சி... நீங்க சொல்லுங்க...
சரி. இப்ப கவனமா கேட்டுக்கோங்க. இத பயன்படுத்துறது ரொம்ப சுலபம். யாருக்கும் எதுக்கும் பாதிப்பே கிடையாது. இந்த மூலிகை பூச்சி வெரட்டி ரெண்டு வகைல நாம தயாரிக்கனும்.
முதல் முறை:
நொச்சி இலை - 1 கிலோ
எருக்கன் இலை - 1 கிலோ
சோத்துகத்தாலை சோறு - 1 கிலோ
வேப்ப முத்து - 1 கிலோ
ஆடாதொடை இலை - 1 கிலோ
இதை எல்லாத்தையும் தனித்தனியா உரல்ல இடிச்சி சாறு எடுக்கணும். இதுல இருந்து 7 கிலோ சாறு நமக்கு கிடைக்கும். இந்த சாறை 100 லிட்டர் தண்ணில கலந்து தெளிக்கணும். இது ஒரு ஏக்கருக்கான அளவு. உங்க இடத்த பொறுத்து உங்களுக்கு தேவையானத கூட குறைச்சி போட்டு செஞ்சிக்கோங்க. இன்னொரு விஷயம், இத இருப்பு வச்சி உபயோகிக்கக்கூடாது.. தேவையான நேரத்துல தயார் செஞ்சி உடனே உபயோகிச்சிரனும். சரியா..?
இன்னொரு முறை என்னன்னா,
நாட்டு பூண்டு - 1 கிலோ
பச்சை மிளகாய் - 1/2 கிலோ
இஞ்சி - 1/2 கிலோ
புகையிலை - 1/2 கிலோ
வேப்பங்கொட்டை சாறு - 200 மில்லி
மண்ணெண்ணெய் - 100 மில்லி
காதி சோப்பு (300 கிராம்) - 1 எண்ணம்
முத நாள் ராத்திரி 3 லிட்டர் தண்ணிய எடுத்து, அத நல்லா கொதிக்க வச்சி, அதுல புகையிலைய உள்ள போட்டு, அப்படியே தனியா எடுத்து வச்சிருங்க. அடுத்தால, வெள்ளப்பூடை அரைச்சி, மண்ணெண்ணெய் கூட சேந்து கலந்து அதையும் தனியா எடுத்து வச்சிருங்க. மறுநாள் காலைல, வேப்பங்கொட்டை சாறையும், காதி சோப்பையும் ஒரு அரை லிட்டர் தண்ணி எடுத்து அதுல போட்டு நல்லா கரைக்கணும். இப்ப மீதி இருக்குறது எது..? பச்சை மிளகாயும், இஞ்சியும்... இதையும் அரைச்சி தனியா எடுத்து வச்சிருங்க. அடுத்தால, நாம முத நாள் ராத்திரி புகையிலை போட்டு தண்ணி சேத்து வச்சிருந்தோம்ல, அது .., அப்புறம் அந்த பூண்டு கரைசல்.., காலைல சேத்த சோப்புக்கரைசல், இப்ப அரைச்ச இஞ்சி மிளகாய் விழுது இப்படி எல்லாத்தையும் ஒண்ணா சேத்து, நல்லா கலக்கி, ரெண்டு தடவ நல்லா வடிகட்டி எடுத்து வச்சுக்கோங்க. அடுத்தாப்புல, இப்படி நாம தயார் பண்ணுன கரைசல, ஒரு நூறு லிட்டர் தண்ணியோட சேத்துட்டா அது நம்ம பயிர்க்கு தேவையான கரைசல் தயார். இதுதான் இயற்கை முறைல செய்யக்கூடிய பூச்சி விரட்டி. இதுவும் ஒரு ஏக்கருக்கு உண்டான அளவுதான். இப்ப நான் உங்களுக்கு ரெண்டு வகையான பூச்சி வெரட்டி சொல்லிக்கொடுத்துருக்கேன். இந்த ரெண்டு வகை கரைசலயும் பூச்சி தாக்குதலை பொறுத்து, பதினைஞ்சி நாள் இடைவேளைல பயிர்களுக்கு மாறி மாறி தெளிச்சிட்டு வரலாம். தெளிக்கும் போது இலைகள் எல்லாத்துலயும் நல்ல படும்படி நல்லா தெளிச்சிட்டு வந்துருங்க. அவ்வளவுதாம்பா.. இதுதான் மூலிகை பூச்சி விரட்டி தயார் பண்றதும், பயன் படுத்துற முறையும்.
அது சரி அண்ணாச்சி... இப்படி தெளிச்சா, பூச்சிங்க எல்லாம் செத்து போயிருமா..?
கண்டிப்பா பூச்சிங்க சாகாது....
என்ன அண்ணாச்சி சொல்லுதீக... இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் பூச்சி வெரட்டிதான...?
ஆங்... அதான். பூச்சி வெரட்டிதான்... பூச்சிக்கொல்லி கிடையாது. பூச்சிங்கள வெரட்டத்தான் செய்யும். சாகடிக்காது. புரியுதா...?
அதாவது, நீங்க தெளிக்கிற இந்த கரைசல், இலைகள் மேல நல்லா படிஞ்சிருக்கும். நம்ம பூச்சி வெரட்டி கரைசல்ல உரைப்பும், கசப்பும் சேத்துருக்கோம் அப்படித்தான... இந்த வாசனை பூச்சிகள செடி மேல உக்காராம வெரட்டிரும். அதையும் மீறி பயிருக்குள்ள வந்து இலைகள கடிக்க ஆரம்பிச்சிட்டு அப்படின்னா, கரைசல்ல இருக்குற கசப்புத்தன்மை பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மைய உருவாக்கிரும். இனப்பெருக்கம் நடக்காது.
இதுதான் இயற்கை முறைல பயிரை பாதுக்காக்குற முறை. இப்படி செஞ்சா நமக்கு ஏதும் பாதிப்பு வருமா...? செலவு அதிகமா வருமா...? வரவே வராது... இனிமே நீங்க.., நான் சொன்ன மாதிரி, இப்படித்தான் செய்வீங்கன்னு எதிர்பார்கட்டுமா...?
நிச்சயமா அண்ணாச்சி... அதுக்குத்தான இவ்வளவு தூரம் வந்து இவ்ளோ நாளா இந்த நல்ல விசயத்த கேட்டுட்டு இருக்கோம்.
சரி.. இயற்கை விவசாயத்த பத்தி சொல்லிட்டேன். அதுக்கு நீங்க எனக்கு என்ன தட்சணை கொடுக்க போறீங்க...?
தட்சனையா.. என்ன அண்ணாச்சி சொல்லுதீங்க...? செலவ குறைக்கிறது எப்படின்னு சொல்லிக்கொடுத்துட்டு, ஆரம்பத்துலயே செலவோட ஆரம்பிக்கீகளே...
நான் கேக்குற தட்சணைய உங்களால கண்டிப்பா கொடுக்க முடியும்...
அப்படியா..? அப்ப சரி. கேளுங்க. முடிஞ்சா தந்துருதோம்.
நீங்க இயற்கை விவசாயம் செஞ்சி, பலன் அடைஞ்சிட்டு, இந்த முறைய எல்லாத்துக்கும் சொல்லி, அவங்களையும் இயற்கை விவசாயத்துக்கு மாத்தி கொண்டாரணும். இதுதான் எனக்கு நீங்க தர வேண்டிய தட்சணை. சரியா..? தந்துடுவீங்களா..?
கண்டிப்பா அண்ணாச்சி.... பக்கத்து ஊரு, எனக்கு தெரிஞ்சவன், தெரியாதவன் எல்லாத்துட்டேயும் சொல்லி, இப்படித்தான் வெவசாயம் பண்ணனும்னு அவங்களையும் இயற்கை வெவசாயத்துக்கே மாத்திக்காமிக்கிறோம். ஏ மாடசாமி, குமாரு, மணி.., என்ன அண்ணாச்சி சொல்ற மாதிரி நாம எல்லாரும் செஞ்சிடலாம்லா....?
செஞ்சிருவோம்... செஞ்சிருவோம்....
சரி.... அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். இத்தன வருஷமா நீங்க ரசாயன விவசாயம் பண்ணுனதால, நெலத்துல நுண்ணுயிரிகள் இல்லாம எல்லாமே அழிஞ்சி போயிருக்கும் இல்லியா? அதனால நுண்ணுயிரிகள நெலத்துல பெருகுறதுக்கு சில காலம் புடிக்கும். அதனால, தொடர்ந்து அமிர்தக்கரைசல நெலத்துக்கு கொடுத்துட்டே வந்தீங்க அப்படின்னா, நுண்ணுயிரிகளும் பெருகிட்டே இருக்கும். முதல்ல நீங்க, உங்க நெலத்துல, கொஞ்சம் இடத்த பிரிச்சி, அதுல இயற்கை வெவசாயம் செஞ்சி பாருங்க. அப்புறம் உங்களுக்கே தெரியும், செலவு குறையிறதும், தரமான தானியங்களோ, காய்கறிகளோ உற்பத்தி ஆகுறதும்... திருப்தியான பிறகு, முழுசா எல்லா இடத்துலயும் பயிர் பண்ண ஆரம்பிச்சிக்கோங்க...
சரிங்க அண்ணாச்சி... அப்படியே செய்றோம்...
இப்ப உங்களுக்கு எல்லாம் புரிஞ்ச மாதிரிதான் இருக்கும். நீங்க நிலத்துல இறங்கி வேலை செய்ய ஆரம்பிக்கும் போதுதான் நெறைய சந்தேகம்லாம் வரும். அதனால, உங்களுக்கு வருற சந்தேகத்த, அப்பப்ப என்கிட்டே கேளுங்க. நானும் சொல்லுதேன். சரி. கோயில் திருவிழா வருதுல்லா, சாமிய கும்பிட்டுட்டு நல்ல படியா இயற்கை விவசாயத்த ஆரம்பிங்க... எல்லாரும் நல்லா செழிப்பா இருங்கப்பா.. வரட்டுமா...
0 Comment to "மூலிகை பூச்சி விரட்டி"
Post a Comment