Saturday, October 24, 2015

பலன் தரும் பழங்கள் - இன்று திராட்சை

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே யூதர்கள் திராட்சை பழத்தின் பலன் அறிந்து அதன் ரசத்தை தங்கள் உணவுகளுடன் இணைத்துக் கொண்டார்கள். அநேகம் பேர் இதை நாம் கிறித்துவ புனித நூலான பைபிளின் மூலம் தெரிந்திருக்கலாம். ஆனால் தற்போது அதன் உபயோகம் என்பது மிகக்குறைந்து அதன் சுவைகொண்ட செயற்கை குளிர்பானங்களை  மட்டுமே எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்யத்திற்கு கேடு உண்டாக்கிக்கொண்டு இருக்கிறோம். நேரிடையாக திராட்சை பழங்கள் சாப்பிடும் போது ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி தெரியாமல் இருப்பது என்பது நமக்கு மிகப்பெரிய பலவீனம். எனவே இக்கட்டுரையில் அதைப்பற்றி எனக்கு தெரிந்த வகையில் கூறுகிறேன்.


நம் நாட்டில் அதிகமாக விளையக்கூடிய கனி வகைகளுள் திராட்சையும் ஒன்று. இதில் கருப்பு மற்றும் பச்சை திராட்சை என இரண்டு ரகங்கள் உள்ளது. கருப்பு ரகத்தில் பன்னீர் திராட்சை என்று ஒன்று உள்ளது. குறைந்த புளிப்புத்தன்மையுடன் சாப்பிடுவதற்கு ருசியாக இருப்பதுடன் அதிக மருத்துவ குணமும் இவ்வகை பன்னீர் திராட்சையில் உண்டு. (இந்த இரண்டு ரகங்களிளுமே விதை உள்ளது, விதை இல்லாதது என்று உள்ளது. பொதுவாக விதை இல்லாத கனிகளையோ காய்கறிகளையோ உணவில் எடுத்துக்கொள்ளவே கூடாது. ஏனென்றால், விதை என்பது அடுத்த விருட்சத்தை உருவாக்கக் கூடியதாகும். விதை இல்லாத பழங்களை சாப்பிடும் போது நாமும் அடுத்த சந்ததியை உருவாக்கும் தகுதி இல்லாத நிலைக்கு தள்ளப்படுவோம். ருசிக்காகவும், அதிக அளவு விளைச்சலுக்காகவும் மட்டுமே இவ்வகை விதை இல்லாத வீரிய ரக விதைகள் தயாரிக்கப்படுகிறது. இதைப்பயிரிட்டால் ஒரு காலத்தில் மண்ணே மலடாகிவிடும்).

எப்படி? எவ்வாறு சாப்பிடலாம் இந்த பழத்தை?
அரைக்கிலோ அளவு கொண்ட பழத்தை சாப்பிடுவது என்பது ஒரு நேர உணவு உட்கொள்ளுவது என்பதற்கு சமம். ஒரு மனிதன் அப்படி அரைக்கிலோ பழத்தினை அப்படியே சாப்பிடுவது என்பது சிரமமான ஒரு காரியமாக இருக்கும். ஆகவே நாம் இதை சாறு எடுத்து சாப்பிட்டால் மிகுந்த பலனும் கிடைக்கும், இலகுவாகவும் இருக்கும். அப்படி சாறு எடுக்கும் போது கண்டிப்பாக மிக்சியில் அரைத்து சாறு எடுக்கக்கூடாது. ஏனெனில், பழத்தில் உள்ள விதைகளும், தோல்களும் சேர்ந்து அரைந்து  அதனுடைய உண்மையான ருசி கெட்டு ஒருவித துவர்ப்புத்தன்மை கொடுத்துவிடும். ஆதலால் கைகைகளால் திராட்சையினை பிழிந்து சாறு எடுப்பது என்பதே சரியான முறை. சாறு எடுத்து பின்பு அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து தேவைக்கேற்ப இனிப்பு சேர்த்து கொள்ளலாம். இவ்வகை சாறே அதிக ருசியுடனும் தெளிவானதாகவும் இருக்கும். இனிப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வெள்ளை சர்க்கரையை (அஸ்காவை) சேர்த்துக்கொள்வதை தவிர்த்து, பதிலாக கருப்பட்டி, அச்சுவெல்லம், பனங்கற்கண்டு, தேன் போன்றவற்றை சேர்த்துக்கொள்வது என்பதே சிறந்தது. அதேபோல் குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளையோ, பிரிட்ஜ் தண்ணீரையோ சேர்க்கக்கூடாது. ஒரே நேரத்தில் குடிப்பது என்பது சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புள்ளது. அப்படிப்பட்டவர்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக பருகலாம். பழகிய பின்னர் ஒரே நேரத்தில் பருகி கொள்ளலாம்.

எடுக்கப்பட்ட சாறை மட மடவென குடிக்காமல், சப்பி சப்பி உமிழ் நீருடன் கலந்து குடிக்கவும். பொதுவாகவே எந்த ஒரு உணவையும், ஏன், தண்ணீரையும் கூட உட்கொள்ளும் போது சப்பி சப்பி உமிழ் நீருடன் கலந்து சாப்பிடுவது என்பதே சிறந்த முறை. அப்போதுதான் அதனதன் முழுப்பயனும் நமக்கு கிடைக்கும்.

'இதை சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்க போகுது?' என்று கேட்பர்களுக்கு..,
சமைத்த உணவை விட நூறு மடங்கு நன்மை தரக்கூடியது இந்த அரைக்கிலோ பழச்சாறு. இதை எந்த ஒரு உணவும் உட்கொள்ளாமல் ஒரு நேர உணவாக எடுத்துக்கொண்டால், கீழ்க்கண்ட பலன்களை பெறலாம்.

உடலில் உள்ள கெட்ட நீர், கபம், வாயு, சளி, குடல் கழிவுகள், உப்புகள் ஆகியவற்றைக் கரைத்து வெளியேற்றும். இதனையே இப்பழ சாறு குடுத்தால் சளி பிடிக்கும் என்று தவறாக எண்ணுகிறார்கள்.

திராட்சையில் உள்ள குளுக்கோஸ் உயர்ந்த தரம் கொண்டது.
இது சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது நல்ல சர்க்கரையாக மாறி உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

ஆஸ்த்துமா நோயை குணப்படுத்துகிறது. இப்பழம் சேர்த்துக்கொள்ளாமல் ஆஸ்த்துமா நோயை குணப்படுத்துவது என்பது முடியாத காரியம்.

இருதயத்தை பாதுகாத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இருதய இரத்த குழாய் அடைப்பு நோயாளிகள் பை பாஸ் சர்ஜரி செய்து கொண்டவர்கள் கண்டிப்பாக இப்பழத்தினை சாப்பிட வேண்டும்.

கர்ப்பப்பை கோளாறு கொண்ட பெண்கள் இப்பழத்தினை எடுத்துக்கொண்டால் அது சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்கும்.

உடல் வளர்ச்சி குறைந்தவர்கள்,  உடல் பலகீனம் உள்ளவர்கள்,  தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகிய பிரச்னை கொண்டவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர விரைவில் நிவாரணம் அடையலாம்.

புற்று நோய் செல்களைக் கரைத்து வெளியேற்றும் தன்மை உடையது.

நான்கு மாத குழந்தைக்குக் கூட சம அளவு தண்ணீர் சேர்த்து, சிறிதளவு இந்த சாறு கொடுக்கலாம். குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் வராது.

உலர்ந்த திராட்சையையும் நாம் பயன்படுத்தலாம். பல நூறு ஆண்டுகளாகவே இந்த உலர் திராட்சையானது உணவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளுபவர்கள் பயணத்தின் போது இந்த உலர் திராட்சை சாப்பிட்டால் சோர்வில்லாமல் பயணம் செய்யலாம். தேவையான சக்தியும் கிடைக்கும்.


பல வகை உணவுகள் என்பது உடலுக்கு தீமை !
பழ வகை உணவுகள் என்பதே உடலுக்கு நன்மை !

Share this

Artikel Terkait

0 Comment to "பலன் தரும் பழங்கள் - இன்று திராட்சை"

Post a Comment