Thursday, August 20, 2015

அமிர்த கரைசல்

ஏ.. ராமசாமி .... இருக்கியாப்பா... ஆங்... இந்தா வந்துட்டேன்...

ஆமாம்ணே.. இருக்கேன்.....
அண்ணே.....நீரு சொன்ன மாதிரி எனக்கு இன்னும் ஆச்சர்யம் தாங்க முடியல. இன்னும் நெறைய உம்மகிட்ட தெரிஞ்சிக்கணும்... அந்த .. அமிர்த கரைசல்னு சொன்ணீகளே ... அத சொல்லுங்கண்ணே...

நீ சொன்னிய .... ஒரு மாட்டு சாணத்த வச்சி ஒரு ஏக்கர் நெலத்துல எப்படி வெவசாயம் பாக்குறதுன்னு கேட்டெல்லா... அதுக்கு ஒரு வழிமுறைதான் இந்த அமிர்த கரைசல். அதாவது நுண்ணுயிரிகளை பெருக்குற முறைதான் அமிர்த கரைசல்.

அத எப்படி செய்யணும்...?

சொல்லுறத கவனமா கேட்டுக்கோ..
இல்ல... எதாவது எழுதி வைக்கணும்னா எழுதி வச்சிக்கோப்பா.. அதாவது,
1) பத்து கிலோ சாணி (புதியது)
2) பத்து லிட்டர் கோமியம்
3) இரண்டு கிலோ அச்சு வெல்லம் (இனிப்புக்காகதான் இந்த அச்சு வெல்லம். அதனால அதுக்குப்பதிலா ரெண்டு கிலோ பப்பாளி பழமோ, அஞ்சு கிலோ சப்போட்டா பழமோ, ரெண்டு லிட்டர் கரும்புச்சாரோ கலந்துக்கிடலாம்).
4) இரண்டு கிலோ பயத்த மாவு
5) இருநூறு லிட்டர் தண்ணி
6) நம்ம வயல் வரப்பு மண் - ஒரு கைப்பிடி அளவு
இதையெல்லாம் ஒரு பெரிய தொட்டி, இல்லைன்னா ஒரு பிளாஸ்டிக் ட்ரம்ல போட்டு நல்லா கலக்கணும்.பிறகுஒரு காட்டன் துணிய போட்டு நல்ல மூடி வச்சுக்க. அந்த கரைசல தினமும் காலைல ஒரு தடவ சாயுங்காலம் ஒரு தடவன்னு கலக்கிட்டு வரணும். இப்படி நாம செய்றதால, அந்த தொட்டில இருக்குற நுண்ணுயிரிகள் எல்லாம் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவ இரண்டு மடங்கா பெருகிட்டே போகும்.. இந்த எண்ணிக்கையை யாராலையும் கணக்கிட முடியாது...
இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் வந்திருக்கனுமே...

ஆமாம்ணே... வயலுக்கு சாணி, கோமியம் தண்ணி போட்டு கலக்க சொன்னீங்க சரி. அதுல போயி எதுக்கு இனிப்பு, மாவு, வயக்காட்டு மண்ணு...?அதுல சந்தேகம் இருக்குண்ணே ...

சந்தேகம் வரணும்லா... அப்பதான நீ இதுல ஆர்வமா இருக்குறது தெரியும்...
சரி. சொல்றேன்... பயத்த மாவு ஏன் போடுறோம்னா, நுண்ணுயிரிகளுக்கு அதுதான் சாப்பாடு.. அப்புறம், இனிப்பு ஏன் போடுறோம் அப்படின்னா, இந்த கரைசலை வயலுக்கு பாச்சும் போது.... இந்த இனிப்போட தன்மை மண்ணுக்குள்ள இருக்குற மண்புழுவை கவரக்கூடியதா இருக்கும். மண்ணு ஏன் போடுறோம் அப்படின்னா... ஏற்கனவே நம்ம மாட்டு சாணத்துல இருக்குற நுண்ணுயிரிகளும், மண்ணுல இருக்குற நுண்ணுயிரிகளும் ஒன்றோடு ஒன்று நட்பாக்கிக் கொள்ளும். இதுதாம்பா அமிர்த கரைசல்...

ம்ம்... சரிண்ணே.... நானும் இதையெல்லாமே எழுதி வச்சிருக்கேன். வீட்டுல போயி செஞ்சி பாக்குறேன்... அப்புறம் இத எப்படி பயன்படுத்தணும் அப்படிங்கரத பத்தியும் சொல்லிக்கொடுக்கனுமே...

கண்டிப்பா சொல்றேம்பா.. ஆனா இப்ப வேண்டாம். நேரமாயிட்டுல்லா .... எனக்கும் களைப்பா இருக்கு... காலைல பேசுவோமா...?

சரிங்கண்ணே... நானும் காலைல வாரேன்.

Share this

Artikel Terkait

0 Comment to "அமிர்த கரைசல்"

Post a Comment