காய்கறிகளின் அரசன் முருங்கைக்காய் என்று சொல்வதுண்டு. உடலுக்கு தேவையான சத்துக்களை அதிகமாக தன்னகத்தே கொண்டுள்ளதால் இதை அவ்வாறு கூறுவர். முருங்கை மரத்திற்கு 'பிரம்ம விருட்சம்' என்ற பெயர் மட்டுமல்லாது 'ஏழைகளின் மரப்பயிர்' போன்ற சிறப்புப் பெயர்களும் உள்ளது.
முருங்கை மரத்தின் இலைகள், காய்கள், பிஞ்சுகள், பூக்கள், பட்டைகள், முருங்கை கோந்து அனைத்திலும் பஞ்ச பூத சக்தி மிகுந்துள்ளதால் உடலில் ஏற்படும் பல பிணிகளை நீக்க வல்லது. மனிதர்களின் உன்னத மருத்துவ பொக்கிஷம் இந்த முருங்கை மரம்.
இதனுடைய பிஞ்சுக் காய்கள் மட்டுமே சமையலுக்கு உபயோகப் படுத்துகின்றோம். அதிக அளவு கலோரி சக்தியை கொண்டுள்ளதால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் இதை உண்பதன் மூலம் பயனடையலாம்.
முருங்கை காய்களை சூப்பாக பயன்படுத்தலாம். துவையல் செய்து உட்கொள்ளலாம். முருங்கைக்காய் பொரியல், முருங்கைக்காய் சாம்பார் போன்றவை தமிழர்களிடையே அதிகம் உபயோகிக்கும் உணவாக உள்ளது.
இரத்த விருத்திக்கும் தாது விருத்திக்கும் முருங்கை காய்கள் சிறந்தது. எலும்புருக்கி நோய் தீர்த்து வைக்கும். பெண்கள் இதை தொடர்ந்து உணவுடன் சேர்த்து வந்தால் அவர்களுக்கு எற்படக் கூடிய மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். காக்காய் வலிப்பு உள்ளவர்கள், பக்க வாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உணவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல பலன் கிடைக்கும். பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதை தொடர்ந்து உணவோடு சேர்த்து கொள்ளலாம். விட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளதால் கண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக இதை அதிகம் சாப்பிட வேண்டும்.
சாதாரணமாக இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் முதுமையை இன்னும் சில காலங்கள் தள்ளிப்போடலாம் என்பது சித்தர்களின் கூற்று. இலை பூ பட்டை முதல் அனைத்திலும் சத்துக்கள் நிரம்ப உள்ளதால் வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து உணவோடு சேர்த்து ஆரோக்யமாக வாழ்வோம்.
முருங்கை மரத்தின் இலைகள், காய்கள், பிஞ்சுகள், பூக்கள், பட்டைகள், முருங்கை கோந்து அனைத்திலும் பஞ்ச பூத சக்தி மிகுந்துள்ளதால் உடலில் ஏற்படும் பல பிணிகளை நீக்க வல்லது. மனிதர்களின் உன்னத மருத்துவ பொக்கிஷம் இந்த முருங்கை மரம்.
இதனுடைய பிஞ்சுக் காய்கள் மட்டுமே சமையலுக்கு உபயோகப் படுத்துகின்றோம். அதிக அளவு கலோரி சக்தியை கொண்டுள்ளதால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் இதை உண்பதன் மூலம் பயனடையலாம்.
முருங்கை காய்களை சூப்பாக பயன்படுத்தலாம். துவையல் செய்து உட்கொள்ளலாம். முருங்கைக்காய் பொரியல், முருங்கைக்காய் சாம்பார் போன்றவை தமிழர்களிடையே அதிகம் உபயோகிக்கும் உணவாக உள்ளது.
இரத்த விருத்திக்கும் தாது விருத்திக்கும் முருங்கை காய்கள் சிறந்தது. எலும்புருக்கி நோய் தீர்த்து வைக்கும். பெண்கள் இதை தொடர்ந்து உணவுடன் சேர்த்து வந்தால் அவர்களுக்கு எற்படக் கூடிய மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். காக்காய் வலிப்பு உள்ளவர்கள், பக்க வாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உணவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல பலன் கிடைக்கும். பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதை தொடர்ந்து உணவோடு சேர்த்து கொள்ளலாம். விட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளதால் கண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக இதை அதிகம் சாப்பிட வேண்டும்.
சாதாரணமாக இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் முதுமையை இன்னும் சில காலங்கள் தள்ளிப்போடலாம் என்பது சித்தர்களின் கூற்று. இலை பூ பட்டை முதல் அனைத்திலும் சத்துக்கள் நிரம்ப உள்ளதால் வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து உணவோடு சேர்த்து ஆரோக்யமாக வாழ்வோம்.
0 Comment to "காயத்துக்கு (உடலுக்கு) ஏற்ற காய்கள் - இன்று முருங்கைக்காய்"
Post a Comment