Friday, August 21, 2015

அமிர்த கரைசல் பயன்படுத்தும் முறை

பாசனத்துக்கு தயாராக உள்ள அமிர்த கரைசல்

ஏ... ராமசாமி ... வாப்பா.... வா. காலைல வான்னு சொன்னேன். அதுக்காக இவ்வளவு சீக்கிரமா அதிகாலைலேயே வந்துட்டியேப்பா....

ஆமாம்ணே... நீங்க சொன்னத நேத்து ராத்திரி நம்ம வீட்டுலயும் சொன்னேன். இதப்பத்தியேதான் ராத்திரி பூராம் பேச்சு.. என்னைய விட என் வீட்டுக்காரிக்கு ரொம்ப ஆர்வமா போச்சுஅண்ணாச்சி... அதனால அவளும் உங்களை பாக்க வாரேன்னு சொல்லிருக்கா. அவ கை வேலைய முடிச்சிட்டு இப்ப வந்துருவா அண்ணாச்சி...

அந்தா வந்துட்டால தங்கச்சி ... வாம்மா ... முத்தம்மா..... நல்லா இருக்கியா...?

நல்லாருக்கேண்ணே. நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?

ஆண்டவன் அருளால நாங்களும் நல்லதாம்மா இருக்கோம். என்ன உன் புருஷன்ட நேத்து நெறைய சொன்னேனே... சொன்னானா...?

ஆமாம்ணே.... நேத்து ராத்திரி மச்சான் வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் சொன்னாக. ரொம்ப சந்தோசம்ணே... அதான் அதப்பத்தி இன்னும் தெரிஞ்சிக்கலாம்னு ரொம்ப ஆர்வமா இருந்துச்சி. வந்துட்டேன்.

சரி. வா,. உக்காருங்க ரெண்டு பேரும்.. நீயி அந்தா அதுல உக்காருப்பா... ம்ம்...
நேத்து நா அவன்கிட்ட அமிர்த கரைசல் தயாரிக்கறத பத்தி சொல்லிட்டு இருந்தேன்.  உனக்கு அது புரிஞ்சிதுல்லா ... நா திரும்ப சொல்லனுமா..? வேண்டாம்ல...?

அதைப்பத்தி நல்லா தெரிஞ்சிகிட்டேன்.. நீங்க மேல சொல்லுங்கண்ணே ...

ம்ம்... அதாவது, அப்படி நாம தயாரிச்ச அமிர்த கரைசலை ஒருநாள் வச்சிருந்து மறுநாளுல இருந்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம். அதிகபட்சமா மூணு நாளைக்கு அந்த கரைசல வச்சிருக்கலாம்.

அதுக்கு மேல வச்சிருந்தா...???

அதுக்கு மேல வச்சிருந்தா உருவாகிற அந்த நுண்ணுயிர்களோட எண்ணிக்கை குறைஞ்சிரும்... அப்புறம் நாம பண்ணுன வேலையெல்லாம் வீணா போய்டும். பலன் இல்ல. அதனால மூணு நாளைக்குள்ள பயன்படுத்தணும்.. தினமும் ரெண்டு வேலை கலக்கி விடனும்.
இந்த இருநூறு லிட்டர் அளவு-நீ வச்சிருக்கிற ஒரு ஏக்கர் நிலத்துக்கு போதும்பா... அதனால நீ தண்ணி பாச்சும்போது இதையும் சேத்து பாசன நீரோட கலந்து விட்டுரு....

பாசன நீரோட கலந்து விடுறதுன்னா  எப்படி அண்ணாச்சி...?

நீ ட்ரம்ல இந்த கரைசல கரைச்சிருந்த அப்படின்னா, அந்த ட்ரம்ம வரப்பு மேல வச்சி..., ஒரு டியூப் போட்டு வெளிய எடு, இல்லைன்னா ஒரு நல்லிய கீழ பொருத்தி தண்ணியோட கலந்து வயலுக்கு போற மாதிரி செஞ்சிறு...

அண்ணே ... ஒரு ஏக்கருக்கு அந்த இருநூறு லிட்டர் போதுமாண்ணே ... கூட கொஞ்சம் கொடுக்குறத பத்தி தப்பு இல்லையே ...?

தப்பே இல்ல முத்தம்மா... இருநூறு லிட்டர் போதும்... கூட கொடுத்தாலும் நல்லதுதான். இத நீ ஒவ்வொரு தடவ பாசனம் பண்ணும்போதும் கரைசல கொடுத்துட்டே இருக்கணும்...

அண்ணே ... இத தவிர வேற முறைல இந்த கரைசல பயன்படுத்தலாமாண்ணே....?

இருக்கு... நீ தயார் பண்ணுன அந்த கரைசல பயிர்களுக்கு தெளிக்கவும் செய்யலாம்.

தெளிக்கிறதுன்னா எப்படி அண்ணாச்சி...?

தெளிக்கிறதுன்னா ... அந்த கரைசல அப்படியே பயிர்களுக்கு நேரிடையா தெளிக்காம, அதோட தண்ணிய கலந்துதான் தெளிக்கணும்... எதுக்காக அப்படின்னா, கரைசல் நல்ல கெட்டியா இருக்கும். இலை மேல விழும் போது  இலை மேல இருக்குற துவாரத்த அடைச்சிடும்.அதோட சுவாசத்த தடை பண்ணிடும். அதனால தண்ணிய சேத்து தெளிக்கணும்...

அப்படின்னா எவ்வளவு தண்ணி சேக்கணும்...?

அஞ்சி லிட்டர் அமிர்த கரைசல நல்லா வடிகட்டி எடுத்துட்டு, நூறு லிட்டர் தண்ணியோட கலந்துட்டு பதினஞ்சி நாளைக்கு ஒரு தடவ தெளிச்சிட்டே இருக்கலாம்.

எல்லா வகையான பயிருக்கும் இத பயன்படுத்தலாமா அண்ணாச்சி...?

ஆமாம்... எல்லா வகையான பயிருக்கும் இத பயன்படுத்தலாம். அப்புறம், வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், ஏன் அனைத்து வகையான பழ வகை மரங்களுக்குக்கூட இதை பயன்படுத்தலாம்.... சரி.. முத்தம்மா ... நீ ஏதோ கேக்கனும்னு நினைக்கற.. என்ன கேளு...

சரி. அமிர்த கரைசல தெளிச்சிட்டோம். இப்படி செய்றதால பயிருக்கு என்ன நன்மை?

Share this

Artikel Terkait

2 Responses to "அமிர்த கரைசல் பயன்படுத்தும் முறை"

  1. கீரை விதையை எறும்பு தின்னுமா? நான் விதைத்த விதை முளைக்கவில்லை அனால் எறும்பு அதிகம் உள்ளது என்ன செய்யலாம்?

    ReplyDelete
    Replies
    1. கீரை விதைகளை சலித்த மணலுடன் கலந்து பாத்தியில் சீராக தூவி பின்பு விரலால் பாத்தியை லேசாக கிளறி விடுங்கள். அல்லது மேலே லேசாக மண்ணை தூவி விடுங்கள். தண்ணீர் தெளித்தால் மட்டும் போதும். நீர் தேங்கி நிற்கும் அளவுக்கு பாய்ச்சக்கூடாது. ஈரப்பதம் லேசா இருக்கும்படி மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். விதைகள் எப்படியும் முளைப்பதற்கு ஒரு வாரம் வரை ஆகும். பொறுத்திருங்கள். ஏறும்புத்தொல்லை கூடுமான வரை இருக்காது. இருந்தால் வேப்பம் புண்ணாக்கை வாங்கி பொடியாக்கி பாத்தியில் தூவி விடுங்கள். எறும்பு தொல்லை இருக்காது.

      Delete