Thursday, August 20, 2015

இயற்கை விவசாயம் பற்றி ....

அண்ணாச்சி .... இருக்கேளா..?

யாருப்பா... ஏ... ராமசாமியா.... வாவே... வா .... வாசல்ல நின்னுட்டா என்ன அர்த்தம்... உள்ள வாரும்வே....

அதான் நீங்க இருக்கேளா ......என்னன்னு .....

என்னப்பா ... அதான் சாயுங்காலம் உன்னிய வர சொல்லிட்டேம்லா, அப்புறம் என்ன..? உனக்காத்தான்வே உக்காந்திருக்கேன். வா. வா.... வந்து இந்த திண்ணைல உக்காரும்...

சொல்லுண்ணே .... இந்த இயற்கை விவசாயம் பத்தி சொல்லுறேன்னு சொன்னிகல்லா...

ம்ம்.... சரி. முதல்ல இந்தகாப்பித் தண்ணிய குடியும்...
அப்படியே நான் சொல்லுறதையும் கேளும்....
பயிருக்கு தேவையான இடுபொருள் எல்லாம் வெளிய விலை கொடுத்து வாங்காதப்பா.. அதை நாமலே தயார் பண்ற மாதிரி இருக்கணும்.

நாமலே தயார் பண்றதா...? யூரியா, பொட்டாஷ்,டி ஏ பி இதெல்லாம் நாமளா தயாரிக்க முடியும்? என்னண்ணே நக்கல் பன்னுதேலா?

அதில்லப்பா... பயிருக்கு தேவையான எல்லா சத்துக்களும் நம்ம மண்ணுலேயே இருக்கு. நீ சொல்லுதிய அந்த ரசாயான உரம் வரதுக்கு  முன்னால நம்ம ஆள்கள் எத வச்சு விவசாயம் பண்ணாக? தொழு உரத்தையும் குப்பையும் போட்டுத்தான் வெவசாயம் பாத்தாக. அவங்க நல்ல மகசூல் பாக்கலியா?

அந்த அளவுக்கு என்கிட்டே இப்ப நெறைய மாடு  கண்ணு எதுவும் இல்லியேண்ணே.... ஒரே ஒரு பால் மாடுதான வச்சிருக்கேன்.

அது போதும்வே. அத வச்சி பத்து ஏக்கருக்கு வெவசாயம் பாக்கலாமே.

மறுபடியும் மறுபடியும் நக்கல் பன்னுதேலா? ஒரு மாட்ட வச்சி பத்து ஏக்கருக்கா...?!!

ஒரு செடி வளரதுக்கு தேவையான நுண்ணூட்ட, பெரூட்ட சத்துக்கள் எல்லாமேநம்ம மண்ணுேலேயே இருக்கு... வெப்ப சக்திய-சூரியன்கிட்ட இருந்து எடுத்துக்கிடுது. தழை சத்தை-காத்துட்ட இருந்து எடுத்துக்கிடுது... நீர் சத்து-மழை மூலமா கிடைச்சிருது..... இப்ப... நீ என்ன கொடுக்குற செடிக்கு....? எல்லா சத்துக்களுமே இயற்கை மூலமாவே கிடைச்சிருதப்பா ...

அது எப்படி அண்ணாச்சி .... நாம உரம் போட போயித்தான பயிறு நல்லா வளருது...?

இதுக்கு ஒரு உதாரணம் சொல்லுதேன். காட்டுல இருக்குற மரம் செடி கொடிலாம் நீ உரம் போட்டாவே வளந்துட்டு இருக்கு. அதுவா வளரலியா?  அத மாதிரிதான் நாமளும் இயற்கை முறைல வெவசாயம் பண்ணும்., இப்ப புரிதா?

அட...... ஆமாம்ல... சரியாத்தான் சொல்லுதீக... ஆனா நான் என்ன செய்யணும்னு சொல்லவே இல்ல.

இரு.. இரு..... உனக்கு புரியனும்னுட்டுத்தான் காட்டுல உள்ள மரம் செடி கொடிய பத்தி சொன்னேன்.  இப்ப விசயத்துக்கு வாறன். பயிர் தான் வளரதுக்கு வேண்டிய சத்துக்கள மண்ணுல இருந்து எடுத்துக்கும்னு சொன்னேன்லா... அதால நேரிடையாவே மண்ணுல இருந்து எடுக்க முடியாது.
 உன் வீட்டுல சமையலுக்கு வேண்டிய எல்லா பொருளும் சமையக்கட்டுல இருந்தாலும் உன்னால நேரிடையா சாப்பிட முடியுமா? முடியதுல்லா..? அத யாராவது சமச்சி தந்தாதான சாப்பிட முடியும்.... அதே மாதிரிதான் பயிருக்கும் அதோட சத்துக்கள வேர்கள் தானாவே எடுக்கக்கூடிய தன்மைக்கு மாத்தி கொடுக்கணும்.

நாமாலா அண்ணாச்சி மாத்தி கொடுக்கணும்...?

இல்லப்பா, அந்த வேலையத்தான் மண்ணுல இருக்குற-நன்மை செய்யுற நுண்ணுயிரிகள் செய்யும...

அப்போ அந்த மண்ணுல ஏற்கனவே நுண்ணுயிரி இருக்குமா?

இருந்த நுண்ணுயிரிக எல்லாத்தையும்தான் உங்களை மாதிரி ஆளுங்கதான் ரசாயான உரம் போட்டுத்தான் கொன்னுட்டீகளே....

சரி ... ஏதோ செஞ்சிட்டோம்... இப்ப அந்த நுண்ணுயிரி வளரதுக்கு நான் என்ன செய்யணும்..?

இப்பதாம்ப்பா கரக்டா விசயத்துக்கு வார....
சொல்லுதேன்.. சொல்லுதேன்.. அதையும் கேளு. மாட்டு சாணத்துலதான் அந்த நுன்னுயிரிகளே அதிகமா இருக்கு.

மாட்டுச்சாணத்துலயா?அப்ப மாட்டுச்சாணம் மட்டும் போட்டா போதுமா? என்கிட்ட இருக்குற ஒரு மாட்டு சாணம் அதுக்கு காணாதுல்லா அண்ணாச்சி...

ஒரு கிராம் மாட்டு சாணத்துல எவ்வளவு நுண்ணுயிரி இருக்கும்னு உனக்கு தெரியுமா? ஒரு உத்தேசமா சொல்லேன் பாப்போம்.

என்ன, ஒரு ஆயிரம், ரெண்டாயிரம் இருக்குமா...?

சொன்னா அசந்துருவேவே... ஒரு கிராம் சாணத்துல ஐநூறு கோடி நுண்ணுயிரி இருக்கும்பா....

அடேங்கப்பா.... ஐநூறு கோடியா ...?

அப்படியே வாய  பொளந்துட்டு இரு....  என் வீட்டுல அவ கூப்புடுதா, என்னான்னு கேட்டுட்டு வந்துடுறேன். அமிர்தக்கரைசல்னு ஒன்னு இருக்கு. அத பத்தி வந்து சொல்லுதேன்... அதுவரைக்கும் கொஞ்சம் பொறு...

Share this

Artikel Terkait

0 Comment to "இயற்கை விவசாயம் பற்றி ...."

Post a Comment