Wednesday, August 19, 2015

அறிமுகம்

வணக்கம் ராமசாமி. எப்படிப்பா இருக்க?

வணக்கம் ராசாண்ணே.. ஏதோ இருக்கோம்.

என்னவே, குரல்ல சுரத்து இல்லாம பேசுத?

நம்ம குடும்பம் பெருசாயிட்டுல்லாண்ணே... அதான் வருமானத்துக்கு என்னபன்னலாம்ன்னுட்டு  இருக்கேன். கொஞ்சம் குழப்பமா இருக்கு.

என்னவே... இத போயி யோசிச்சிட்டு இருக்கீவ..? உன்கிட்டதான் விவசாய நெலம் இருக்குல்லா? அதுவே உமக்கு பணம் கொழிக்கிற தொழில்தான?

அது எப்படிண்ணே ? நெறைய பேரு சம்பாதிக்க முடியாம வித்துட்டு போறானுக. அதுல எப்படிண்ணே லாபம் பாக்குறது?

அப்படி கேளுப்பா.. உன்கிட்ட இருக்குற அந்த கொஞ்சூண்டு நெலத்த வச்சி நீ பெரிய பணக்காரனா வாரதுக்கு நான் வழி சொல்லுதேன். சரி. நீ இப்ப எவ்வளவு நெலம் வச்சிருக்க? அதுல என்ன பயிரு போட்ருக்க?

என்கிட்டே என்ன, ஒரு ஏக்கர் தான இருக்கு. அதுலயும் தண்ணி பாசானம் கம்மியாத்தான் இருக்கு. நெல்லு போடுவேன். அது போக அப்பப்ப காய்கறி ஏதாவது போட்டுக்குவேன். அதுல என்னால சரியான லாபம் பாக்க முடியலியே...

இது போதுமே ராமசாமி. நான் சொல்றத நீ கேக்கறதா இருந்தா உனக்கு லாபம் கொழிக்கிற பூமியா உன் நெலம் மாற வைக்கிறேன். இது என் பொறுப்புவே.

அண்ணே.. இது என்ன கேள்விண்ணே.... நீங்க சொல்லி நா ஏதும் கேக்காம இருந்திருக்கேனா? அதுலயும் பணக்காரனா வேற மாத்தி காட்டுறேன்னு சொல்லி இருக்கீக. கேக்காம இருப்பேனா? சொல்லுங்கண்ணே... சொல்லுங்க..

இயற்கை விவசாயம் பத்தி நீ கேள்வி பட்டிருக்கியாப்பா?

எதோ சொல்லுவாக. ஆனா அத பத்தி எனக்கு அவ்வளவா தெரியாதுண்ணே... நீங்கதான் தாத்தா காலத்துல இருந்து ரெண்டு, மூணு தலைமுறையா நல்லபடியா வெவசாயம் பாத்துட்டு இருக்கீக. நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். சொல்லுங்களேன். கேப்போம்.


ம்ம்.. சரி.. இப்ப உனக்கு ஒரு பயிர்., பயிர் செய்யும் போது என்னல்லாம் அதிகப்படியான செலவு வரும். சொல்லு...

எனக்கு உரம் வாங்க, பூச்சி கொல்லி வாங்க, களை கொல்லி வாங்க, களை எடுப்புக்கு அப்படி இப்படின்னு இதுலதாம் செலவு அதிகமாகும் அண்ணாச்சி...

நான் சொல்ற மாதிரி இந்த இயற்கை முறைல விவசாயம் பாத்தேன்னா இந்த செலவெல்லாம் உனக்கு வராதுன்னு சொல்றேன். அப்புறம் செலவ குறைச்சாலே உனக்கு லாபத்துல ஒரு பெரிய பங்குதான?

செலவ குறைக்கிறதா...? அது எப்படி?

வெளக்கமா சொல்ல கொஞ்சம் நேரமாகும். நானு இப்ப வயக்காட்டுல உள்ள வேலைய முடிக்கத்தான் போயிட்டு இருக்கேன். அத முடிச்சிட்டு வந்து சாயுங்காலமா எல்லாத்தையும் சொல்லுதேன். நீயும் நம்ம வீட்டு பக்கம் சாயுங்காலம் வாரும்வே. பொறுமையா பேசுவோம். சரியாவே.

சரிண்ணே... சாயுங்காலமே பாப்போம். அப்ப நானும் வரேண்ணே...

Share this

Artikel Terkait

0 Comment to "அறிமுகம்"

Post a Comment